அக்கரப்பத்தனை மன்றாசி பஸாரில் உணவகம் ஒன்றில் ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரைப் பொலிஸார் நேற்று (07)மாலை கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாரும் புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து தீடிரெனக் கடையை முற்றுகையிட்டுச் சோதனை மேற்கொண்டபோது. ஐஸ் போதையுடன் இருவரையும் கைது செய்தனர்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாந்த பண்டாரா தலைமையிலான குழுவின் முயற்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையை பொலீசார் முன்னெடுத்து வருகின்றனர்
கௌசல்யா
