காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார். சிறுவரகளும் இளைஞர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார். தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த மாணவி மரணம்!
Category: இலங்கை
ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொழும்பு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபையின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தலைமையில் கொழும்புவில் ஈபிடிபி போட்டியிடுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கொழும்புவில் ஈபிடிபி சார்பில் போட்டியிடுகின்றனர். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர், வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு ஈபிடிபியைப்…
பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியத்தமைக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த பதில் பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.
தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த மாணவி மரணம்!
கொழும்பு தாமரைக் போபுரத்தைப் பார்வையிடச் சென்ற மாணவி ஒருவர் போபுரத்தின் மேலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவி சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. மாணவி தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பதைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைப்பாடுகளை 2நாளில் விசாரிக்க பணிப்புரை
முறைப்பாடுகளை 2நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளை 2 நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்
மக்களின் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு
மக்களின் ஆணையுடன் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மகா சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அதன்போது நாட்டின் வளங்களைக் கொண்டு உச்சகட்ட பலன்களை அடைந்து வலுவான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்திய மகாநாயக்க தேரர்கள், அதனால் இலங்கை உலகில் சுயாதீன நாடாக எழுந்து நிற்க முடியும் என்றும் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அரசியல் ரீதியான அமைதிக் காலம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செய்ய வேண்டியுள்ள பல்வேறு பணிகளை தேர்தலில்…
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்க உத்தரவு
தற்காப்புக்காக குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்துத் துப்பாக்கிகள், வெடிபொருள்களைத் திரும்பப் பெற பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது. நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளையும் வெடிபொருள்களையும் மீள ஒப்படைக்க வேண்டும். மீளாய்வு செய்து தேவையைத் தீர்மானித்த பின்னர் அந்த நபர்களுக்கு துப்பாக்கிகள் தேவையெனின் திரும்ப வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கலாநிதி ஜெய்சங்கர்- ரணில் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு
அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவிப்பு
கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். அதன்போது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.