மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் குத்துச்சண்டை போட்டி இம்முறை கண்டி சில்வெஸ்டர் கல்லூரியில் கடந்த ஜூன் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி சார்பாக மாணவர்கள் நால்வர் பங்குபற்றினர். அவர்களில் ஆர்.கிந்துஜன்,என்.செக்கினா ஆகிய மாணவர்கள் வெண்கல்ப் பதக்கங்களை சுவீகரித்தனர்.
வை.தன்யசிறி என்ற மாணவி வெள்ளிப்பதக்கத்தைச் சுவீகரித்துப் பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர்களுக்கான பயிற்சியைக் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆசிரியர் செபஸ்டியன் வழங்கியுள்ளார். இப்போட்டியில் மத்திய மாகாணத்தில் உள்ள சுமார் 52 பிரபலமான பாடசாலைகள் பங்குபற்றிமை குறிப்பிடத்தக்கது.
