வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நேற்று 29.06.2026 ம் திகதி புதிதாக அறநெறி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
சிறுவர்களின் எதிர்காலத்தை கல்வியால் உயர்த்துவோம் எனும் தொனிப் பொருளில், மீனாட்சி தோட்ட இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை ஆரம்ப வைபவம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கடவலையைச் சேர்ந்த சைவ சித்தாந்த சிவ பித்தன் தியா சுவாமிகள் கலந்துகொண்டார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் 67 க்கும் மேற்பட்ட அறநெறி பாடசாலை மாணவ மாணவிகள் உள்வாங்கப்பட்டிருந்தனர் அத்தோடு ஹட்டன் கமூக வத்த இளைஞர் கழக தலைவர் நவநீதன் என்பவரின் அன்பளிப்பாக அனைத்து சிறுவர் சிறுமிகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகளின் கலை, கலாசார நிகழ்வும் மேலும் மெருகூட்டியிருந்ததும் விசேட அம்சமாகும்.நிகழ்வில் தோட்ட பொதுமக்கள் ஆலய நிர்வாக உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சமூகம் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு ஆரம்ப நிகழ்வை சிறப்பித்தனர்.


மஸ்கெலியா விசேட நிருபர்
