கலாநிதி ஜெய்சங்கர்- ரணில் சந்திப்பு

ஜெய்சங்கர் ரணில் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். புதிய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வலுவான உறவைப் பேணுவதாக தான் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே, முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது இராஜதந்திரி இவர்.

அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவிப்பு

அபிவிருத்திக்கு உதவ எக்ஸிம் வங்கி

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். அதன்போது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவென இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இங்கு 28 குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதா ஆணைக்குழு அறிவித்துள்ளது.