நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் இலங்கை மக்களையும் பாதுகாக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டிலில் விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கு,கிழக்கு ஐரோப்பாவின் இராணுவ நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்புவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பே சுற்றுலாப் பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாமென எச்சரிக்கை செய்திருக்கின்றது. இதனையடுத்து நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகப் பொலிஸும் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அவதானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை மீது…
Category: இலங்கை
அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை
அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் அறுகம்பே பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என்று தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை செய்வதாகக் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக டெய்லிமரர் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவலைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுவட்டாரங்கள் குறித்து எந்நேரமும் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து உடனே வெளியேறிவிடுமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. அவசரத் தேவைகளின்போது 119 என்ற பொலிஸ் அவசர இலகத்திற்கு அறிவிக்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகம், உள்ளுர் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்பாடல் கருவிகளை உரிய முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!
நியாயமான விலையில் அரிசி விற்பனை
நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும்…
துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு
துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…
கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு
கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு: பிவித்துரு கெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை அறிககையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் முற்று முழுதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி ஜயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி ஷானி அபேசேகர ஆகியோரை இலக்குவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் பேரவையில் இணைந்துகொண்டதன் பின்னரே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார். கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு செய்வதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், 2024 ஜூன் மாதம்…
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்றும் வேறு எவருக்கும் அது சாத்தியமில்லை என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்பதோடு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பயணிக்க எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எம்மிடம் கீழ்த்தரமான அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு
பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…
அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?
அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? என்ற கேள்விக்கு எத்தனைபேருக்குப் பதில் தெரியும்? ஜனாதிபதியுடன் நடந்த கூட்டத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக அவதானம் என்று எழுதுகிறார்கள். சிங்களத்தில் அவதானம் என்பது கவனத்தையும் குறிக்கும் ஆபத்தையும் குறிக்கும். தமிழில் அவதானம் என்பது ஒரே தடவையில் அல்லது வேளையில் பல விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்துவதைக் குறிக்கும் ஒரு வட சொல்லாகும். பீடை நாசினிகள் ஆபத்தானவை அவதானமாகக் கையாளவும் என்று சொல்வது எச்சரிக்கை செய்வதாகப் பொருள்படும். இதிலிருந்து கவனம் வேறு அவதானம் வேறு என்பது புரியும். கவனம், அவதானம் என்பதைப் பற்றி …விஜயா என்கின்ற வரைப்பதிவாளர் தரும் விளக்கத்தைப் படியுங்கள் யாம் பெற்ற இன்பம் – 20 அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? கவனத்திற்கும் அவதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஆராய்ந்தால்,…
வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்
வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் இலகுவாகப்பெற வழிசெய்யுமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் அதிகாரிகளுக்குப் பணிப்பு விடுத்துள்ளார். வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் பெறுவது குறித்து மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. , மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு…
ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள்
தான் பிரதமராக இருந்தபோது தனக்கு ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது அரசாங்கத்திலிருந்த கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் கணவர் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருடன் ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தனது மேசையின் மீது வைத்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு போகுமாறும் “உம்மை நான் கைது செய்திருக்க வேண்டும் “என்றும் எச்சரித்து அனுப்பியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு சந்திரிகா உரையாற்றினார். ஒரு செயற்றிட்டம் ஒன்றைப் பெறுவதற்காகத் தனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறிய சந்திரிகா, முடிந்தவரை கொள்ளையடியுங்கள், ஆனால், சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தனது எம்பிமாருக்கு அறிவுரை கூறிய ஒரு ஜனாதிபதியும் நமது…