இன்று 100 மில்லிமீற்றர் மழை!

இன்று 100 மில்லிமீற்றர் மழை!

இன்று 100 மில்லிமீற்றர் மழை!: நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும்

மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும் என்று இரத்தினபுரி பிரதேச சபைத் தேர்தலில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடும் கே. பாபு கண்ணன் தெரிவித்தார். பிரதேச மக்களுக்கு சேவையாற்ற ஆளும் கட்சியே உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாபு கண்ணன் கூறினார். ஹப்புகஸ்தன்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாபு கண்ணன் இவ்வாறு கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பொதுஜன ஐககிய முன்னணியில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் போட்டியிடும் பாபு கண்ணன் மேலும் உரையாற்றுகையில்: நான் போட்டியிடும் வட்டாரத்தில் ஆளும் கட்சிவெற்றி பெற்றால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். மக்களுக்குச் சேவையாற்ற பிரதேச சபைகளில் ஆளுங்கட்சியால் மாத்திரமல்ல. எதிர்க் கட்சியாலும் சிறந்த சேவையாற்ற முடியும். எல்லா உறுப்பினர்களுக்கும்…

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள். புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!: மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மைகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணி நிலம் வேண்டும் பரா சக்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியதைப்போன்று திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு, ‘அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது…

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்: நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் 22 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெல பகுதிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி எதிரே வந்த லொறி ஒன்றுடன் விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ் சாரதி உள்பட 22பேர் காயமடைந்து வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் 20பேர் சிகிச்சை பெற்று வெளியேறியதாவும் இராணுவ சாரதியும் மற்றொரு வீரரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு: பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து

தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்து

தேயிலை ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்கு உள்ளாகி வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று (19) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், டிப்பர் லொறியில் இருந்த மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (19) இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வணராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நோர்வூட் பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் டிப்பர் லொறியில் ஏழு பேர் பயணித்ததாக…

17ஆம் திகதி கடும் வெப்பம்!

17ஆம் திகதி கடும் வெப்பம்!

17ஆம் திகதி கடும் வெப்பம்!: நாட்டின் பல பகுதிகளில் ஏப்ரல் 17ஆம் திகதி வியாழக்கிழமை வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென், கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையக மக்களின் மொழி தமிழா?

ஜனவரியில் மாத்திரம் 4943டெங்கு நோயாளர்கள்

ஜனவரியில் மாத்திரம்

ஜனவரியில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள்: இந்த மாதத்தில் மாத்;திரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் மட்டும் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 1,382 பேர், கம்பஹா மாவட்டத்தில் 764 பேர், காலி மாவட்டத்தில் 315 டெங்கு நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது. மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள்,…