பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி விதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு: யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு இன்று வைபவரீதியாக நடைபெபற்றது. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு…

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமைகள் எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் சலுகைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013…

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்: தற்போது ஆங்காங்கே எட்டிப்பார்க்க முயற்சிக்கும் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தங்கள் காரணமாக நாடு எதிர்நோக்கும் விரும்பத்தகாத அனுபவங்கள் நவம்பர் 14ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் எனவும், இதுவே இந்த மாற்றக் காலம் எனவும் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்துள்ளார். கஸ்பாவ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாகத் தெரிவித்த நிபுணாராச்சி: “எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத…

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு: பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது. மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதிவரை நடைபெறும். முப்படை முகாம்கள், அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அளிக்க முடியும். உரிய நாள்களில் தபால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல்அலுவலகங்களில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று நடைபெறும்போது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம்…

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நட்தப்படலாம் என்று கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துச் சீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் நேற்று தமது அறிக்கையினை முன்வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அந்த விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில்…

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல்…

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!

எல்பிட்டி பிரதேச சபை ஜேவிபி வசமானது

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!: காலி மாவட்டத்தின் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி, எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது! விபரம் வருமாறு:- தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 சுயேச்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தேசிய…

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு: ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு நடத்தியபோது தற்போதைய பொருளாதார, அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கு மிடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு தொடர்புகள் குறித்து இதன்போது நினைவுகூறப்பட்டது. பல துறைகள் ஊடாக…

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

வாக்குமூலம் வழங்க நான் தயார்

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர்,…