நுவரெலியா பிரதேச சபையில் இதொகா ஆட்சி அமைத்துள்ளது. நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் தலைவர், உப தலைவர் தெரிவு 18.06.2025 அன்று காலை 12 மணியளவில் நுவரெலியா பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் வேலு யோகராஜ், திறந்த வாக்கெடுப்பு மூலம் பிரதேச சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹேவகே ஆஷா தில்ருக்ஷி பொன்சேகா சபையின் உப தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நுவரெலியா பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கை தொழிலாளர் காங்கிஸ் சார்பாக வேலு யோகராஜின் பெயர் முன்மொழியப்பட்டது, அதனையடுத்து, இரண்டாவது நபரின் பெயர் முன்மொழியப்படாததனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…
Category: இலங்கை
இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் பதவியேற்றார்
புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக ஏற்றார். இரத்தினபுரி மாநகர சபையிலுள்ள முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் இதற்கு முன்னதாக இதுவரை காலமும் நகரசபைக்கும் அதன் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த மாநகர சபை ஆணையாளரிடமிருந்து அதற்குரிய சாவியை உத்தியோகபூர்வ புதிய முதல்வர் இந்திரஜித் பெற்றுக் கொண்டார் இந்நிகழ்வில் சர்வ மதகுருமார்களும் நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பன்விலை பிரதேச சபையைக் கோட்டைவிட்ட தமிழ் உறுப்பினர்கள்
கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. வியாழக்கிழமை இடம் பெற்ற சபை ஒன்று கூடலில் மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் வாக்களித்தன இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது. கடந்த 19 வருடங்களின் பின்னர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது.5 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்)…
நுவரெலியா மாநகர சபையில் ஜேவிபி ஆட்சி
நுவரெலியா மாநகர சபையில் ஜேவிபி ஆட்சி அமைத்துள்ளது. நுவரெலியா மாநகர சபைக்கு தெரிவான உறுப்பினர்களின் மேயர், பிரதி மேயர் தெரிவு 18.06.2025 அன்று காலை 8.30 மணியளவில் நுவரெலியா மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் உபாலி வனிகசேகர, திறந்த வாக்கெடுப்பு மூலம் மாநகர சபையின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அதே நேரத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் சிவன்ஜோதி யோகராஜா சபையின் பிரதி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் ஆகிய தெரிவுகள் மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் ஏ.எம்.கே.பி.கே. சமிலா அத்தபத்து தலைமையில் இடம்பெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி சார்பாக உபாலி வனிகசேகர, சுயேட்சை குழு சார்பாக அஹகம ராமநாயகலாகே அஜித் குமார ஆகியோர் தலைவருக்காக போட்டியிட்டனர். இதில் திறந்த…
கம்பஹாவில் 10மணித்தியால நீர் வெட்டு
கம்பஹாவில் 10மணித்தியால நீர் வெட்டு: கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (22) காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…
சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு
சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் என். சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டுத் தம் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் சிவானந்த ராஜா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, அவர் உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தா தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.…
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவியைத் துஷ்பிரயோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொழும்புவில் நேற்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு: 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது . 689 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு மாலை நான்கு மணிவரை நடைபெற்றது. வட்டார மூலம் 258 உறுப்பினர்களும் இரட்டை தொகுதி மூலம் 165 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 932850 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.சகல வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இறக்குவானை தேர்தல் தொகுதியில் இறக்குவானை நகர் பரிசுத்த யோவான் தமிழ் தேசிய கல்லூரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு காலை ஏழு மணிமுதல் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையாக நின்று விறுவிறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு நிறைவுற்றதையடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. எம். சந்திரகுமார், இறக்குவானை
நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு
நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு: உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் இன்று (6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. க. கிருஷாந்தன்