மலையக அரசியல் அரங்கத்தின் 78 வது சுதந்திர தினம் இன்று காலை சாமி மலை ஸ்டொக்கம் தோட்ட குழந்தைகள் காப்பக முற்றத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் அதன் உதவி செயலாளர் .சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் அதன் தேசிய அமைப்பாளர் எஸ்.சுரேஸ்குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய :
சுரேஸ்குமார் இலங்கை அந்நியர் ஆட்சியில் இருந்த விடுபட்டு 78 ஆண்டுகள் கழிந்த போதும் ் மலையக தமிழ் மக்களை அந்நியராக பார்க்கும் மனநிலையை இலங்கைக்குள் காணப்படுகிறது . அண்மைய தித்வா புயல் அனர்த்தத்தின் பின்னதான மீட்பு மிள் கட்டமைப்பு நடவடிக்கைகளில் அவை தெளிவாக வெளிப்படுகிறது.இலங்கை அரசு அறிவித்துள்ளது மீ
ட்பு நிவாரணங்கள் முதல் மீள் கட்டமைப்பு அறிவிப்புகள் வரை மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்த ப் புறக்கணிப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு மலையக தமிழ் மக்களையும் இலங்கையர்களாக இணைத்து மேல் கட்டுமான அபிவிருத்தியை முன்னெடுக்க வலியுறுத்தியும் மலையக ப் பகுதிகளில் அனர்த்தம் இடம்பெற்ற இடங்களில் நின்று நாங்களும் இலங்கையர்களே என இலங்கை தேசியக் கொடியை ஏற்றி 78வது சுதந்திர தினத்தை அனுஷ்டிக்க மலையாக அரசியல் அரங்கம் முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் அபிவிருத்தி குன்றிய சமூகமாக மலையாக தமிழர் சமூகத்தையே புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகிறது ஆனால் அவர்களை நோக்கிய தேசிய அபிவிருத்தி செயல்முறைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. இதற்குப் பிரதான காரணம் இன்னும் இந்த மக்கள் முழுமையான இலங்கை பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்படாமை ஆகும்.
மஸ்கெலியா நிருபர்
