மத்திய கிழக்கில் போர் நீடித்தால், நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயத்தை அவர்கள் கணித்துள்ளனர், இது மத்திய கிழக்கில் போருடன் தொடர்புடைய பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதாக லங்காதீப செய்தி வௌியிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நாட்டின் அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளும் 15 சதவீதம் வரை உயரும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இந்தச் சூழலில், நடுத்தர வர்க்கம் மேலும் வீழ்ச்சியடையும் என்றும், பல்வேறு நபர்களை சார்ந்திருக்கும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகளிடமும் கல்லூரி மாணவர்களிடமும் உணவு பற்றாக்குறை கடுமையாக பாதிக்கப்படும் என்று பொருளாதார பகுப்பாய்வின் அறிக்கைகள்கூறுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் இதுவரை மக்களை முறையான பயிர்ச் செய்கை செயற்பாடுகளுக்கு அழைக்காதது ஒரு பெரிய பிரச்சினை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பூச்சாடிகளில் கூட உணவுப் பயிர்களை வளர்க்க மக்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றார்.
ஆனால், இதுபோன்ற நிலைமைகள் இதுவரை காணப்படவில்லை என அவர் கூறினார்.
இதேபோல், பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார, புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த் அத்துகோரலே, உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்புக்குத் திரும்பியுள்ள நிலையில், இலங்கை இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை என்று கூறினார்.
