இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்துக்குள் நுழைந்த கருப்பு ஆடுகளைக் கண்டுபிடிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆகியோருடனும் பிரதி அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
அதேவேளை, காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரியைத் தொடர்புகொண்ட பிரதி அமைச்சர் பிரதீப் :
எதற்காக தோட்டப்பகுதியில் இவ்வாறான கட்டமைப்பு (கருப்பு கும்பல்) உருவாக்கப்பட்டது, இதன் பின்புலம் என்னவென்பது பற்றி விளக்கம் கோரியுள்ளார்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் அதே இடத்தில் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
