கொட்டகலையில் உள்ளூராட்சி வாரம் ஆரம்பம்.
பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொட்டகலை பிரதேச சபையினால் செப்டெம்பர் 14 முதல் செப்டெம்பர் 19 வரை செயற்படுத்தப்படும் உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்ச்சி இன்றைய தினம் (14) கொட்டகலை பிரதேச சபை வளாகத்தில் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்ச்சியில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் ஜேசுதாசன் யாகுலமாரி,உறுப்பினர்கள், மதுவரி திணைக்கள அதிகாரி, திம்புள்ளை பத்தனை பொலீஸ் நிலைய அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கொட்டகலை தபால் நிலைய அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் சிவராம் ராஜவீரன்,முன்னாள் செயலாளர் விஜேசுந்தரம், கொட்டகலை பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
