நாமல் ராஜபக்ஷவுக்கு விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏர்பஸ் விமான கொள்முதல் தொடர்பான பரிவர்த்தனையில் 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்டம்பர் 29 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசாங்க எஸ். போதாரகம உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் செப்டம்பர் 22 ஆம் திகதி எழுத்துமூல பிணை மனுவைத் தாக்கல் செய்யுமாறும், வழக்கில் வாதியளிக்கும் ஊழல் ஒழிப்பு ஆணையம் தனது ஆட்சேபனைகளை செப்டம்பர் 25 ஆம் திகதிக்குள் தாக்கல் செய்யுமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பிணை தொடர்பான உத்தரவு செப்டம்பர் 29 ஆம் திகதி வழங்கப்படும் என்றும் நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
