ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். எனினும், அவரது அறிவிக்குப் பின்னரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் இரு நாடுகளும் தற்காலிகமாக இன்று இரவு ஏழு மணி வரை போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் வான்பரப்பை மீண்டும் திறந்துள்ளது.
Category: உலகம்
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் படையினரை பாராட்டியுள்ளார்.
ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நில நடுக்கம் றிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. ஈரானின் செமினான் மாகாணத்திற்கு 37 கிலோ மீற்றர் தென் மேற்காகப் பத்துக் கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கம் அணுவாயுதப் பரிசோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணுவாயுத நிலையங்களை நிலத்திற்குக் கீழ் அமைந்திருந்தாலும் சோதனை செய்ததால் ஏற்பட்ட நில நடுக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல் – வடகொரியா
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது. ‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க…
காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை
காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோ உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணித்தியாலத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மத்திய காசா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட உதவி லாரிகளில் இருந்து உணவு பெற காத்திருந்த மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எலான் மஸ்க்கின் றொக்கட் வெடித்துச் சிதறியது
அமெரிக்காவின் டெக்சாஸில், எலான் மஸ்க்கின் றொக்கட் வெடித்துச் சிதறியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும். அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன.
இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ‘ஜி7’ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி. அங்கு பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அண்மைகாலமாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வு மறைந்து, புதிய தொடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடா பிரதமருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. “இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. நானும் பிரதமர் கார்னியும் இணைந்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்,” என்றும் பிரதமர் மோடி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை
புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜூன் 13ஆம் தேதி ஈரான்மீது குண்டு வீசத் தொடங்கிய இஸ்ரேல், குறைந்தது 11 மூத்த ராணுவ அதிகாரிகளைக் கொன்றுள்ளது. அந்த வரிசையில் மேஜர்-ஜெனரல் அலி ஷட்மானியை தான் கொன்றுவிட்டதாக செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் கூறியது. ஈரானில் ஆக மூத்த ராணுவத் தளபதி என அவரை இஸ்ரேல் வர்ணித்தது. முதல் நாள் போரில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு தினங்களுக்கு முன்புதான் ஷட்மானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். மேஜர்-ஜெனரல் ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக கருத்து எதுவும் வெளிவரவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானின் நலிவுற்றுவரும் ராணுவத் தலைமைத்துவத்துக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். திரு ஷட்மானியின் கொலை, ஈரானின் உளவுத்துறைக்குள் ஊடுருவ இஸ்ரேலின் நீண்டகால முயற்சியை…
கிரேக்கத்தில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை
கிரேக்கத்தில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை: தென் கிழக்கு ஐரோப்பிய நாடான கிரேக்கத்தில் (கிரீஸில்) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கிரீட் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. பிரபல சுற்றுலாத் தலமான யோலண்டாவிலிருந்து 58 கிலோமீற்றர் தொலைவிலும் 77 கிலோமீற்றர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்
வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்