வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம்

வடக்கில் மே 29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வடக்கில் மே 29இல் போராட்டம் ஆரம்பமாகும். அந்தப் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும். வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த…

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி

ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்: மாகோவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான தண்டவாளப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் (28) கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது. ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய, இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொழும்பு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபையின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தலைமையில் கொழும்புவில் ஈபிடிபி போட்டியிடுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கொழும்புவில் ஈபிடிபி சார்பில் போட்டியிடுகின்றனர். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர், வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு ஈபிடிபியைப்…