பிரதமர் கலாநிதி ஹரிணி பூட்டான் பயணமானார். ‘உலகளாவிய விழிப்புணர்வுள்ள உணவு முறை உச்சி மாநாட்டில்’ பங்கேற்பதற்காக அவர் இன்று (31) பூட்டான் பயணமானார்.
நாளை (செப்டம்பர் 1) ஆரம்பமாகும் உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்புரையாற்றுகிறார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான முக்கியக் கலந்துரையாடல்களிலும் அவர் பங்கேற்கிறார். (மலைக்குருவி)
