மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட தூர பெருந்தோட்ட பிரதேசத்திலிருந்து மஸ்கெலியா நகருக்கு வந்து ஆயுர்வேத மருத்துவத்தைப் பெற முடியாதவர்களுக்கு,
அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று ஆயுர்வேத மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்ற எண்ணக்கருவில் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் நடவடிக்கை எடுத்தார்.
மஸ்கெலியா காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள தம்பேத்தன பிரிவில் உள்ள வட்டார மக்களுக்காக மொக்கா தமிழ் வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார், அந்த வட்டாரத்தில் உள்ள பிரதேச சபையின் ஏனைய உறுப்பினர்கள் சபையின் செயலாளர் ஆகியோர் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யபட்டு சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் அந்த வட்டாரத்தில் உள்ள காட்மோர் தனியார் தோட்டத்தில் உள்ள ஏழு பிரிவில் உள்ள நோயாளிகள் மொக்கா தோட்ட நான்கு பிரிவுகளில் உள்ள நோயாளிகள் டீசைட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் உள்ள நோயாளிகள் 300 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்னடைந்தார்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்






