50இற்கும் குறைவான மாணவர்களுடன் 1000 இற்கும் அதிக பாடசாலைகள் நாட்டில் இயங்குவதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வித்துறை மறுசீரமைப்புத் திட்டம் குறித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டுக்கான அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
ஒரு தேசிய பாடசாலை உட்பட மொத்தம் 1,665 பாடசாலைகள் 50 க்கும் குறைவான மாணவர்களுடன் இயங்குகின்றன. இதில் 49,189 மாணவர்களும், 10,324 ஆசிரியர்களும் உள்ளனர்.
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 பாடசாலைகளில் மொத்தமாக 122,891 மாணவர்களும், 16,923 ஆசிரியர்களும் உள்ளனர்.
101 முதல் 200 மாணவர்கள் வரை உள்ள 2,149 பாடசாலைகளில் மொத்தமாக 314,851 மாணவர்களும், 34,450 ஆசிரியர்களும் உள்ளனர்.
201 முதல் 500 மாணவர்கள் வரை உள்ள 2,546 பாடசாலைகளில் மொத்தமாக 812,019 மாணவர்களும், 56,925 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,000 மாணவர்கள் வரை உள்ள 1,208 பாடசாலைகளில் மொத்தமாக 831,999 மாணவர்களும், 4,071 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,001 முதல் 1,500 மாணவர்கள் வரை கொண்ட 372 பாடசாலைகளில் மொத்தமாக 448,994 மாணவர்களும், 23,804 ஆசிரியர்களும் உள்ளனர்.
1,501 முதல் 2,000 மாணவர்கள் வரை உள்ள 186 பாடசாலைகளில் மொத்தமாக 318,966 மாணவர்களும், 16,041 ஆசிரியர்களும் உள்ளனர்.
2,001 முதல் 3,000 மாணவர்கள் வரை உள்ள 192 பாடசாலைகளில் மொத்தமாக 459,537 மாணவர்களும், 21,744 ஆசிரியர்களும் உள்ளனர்.
3,001 முதல் 4,000 மாணவர்கள் வரை உள்ள 68 பாடசாலைகளில் மொத்தமாக 230,518 மாணவர்களும், 10,214 ஆசிரியர்களும் கல்வி கற்கின்றனர்.
4,000க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட 33 பாடசாலைகளில் மொத்தமாக மட்டும் 158,580 மாணவர்களும், 6,813 ஆசிரியர்களும் உள்ளனர்.
மேலும் , 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 65 பாடசாலைகளும், 10 முதல் 25 ஆசிரியர்களைக் கொண்ட 4,242 பாடசாலைகளும், 26 முதல் 50 ஆசிரியர்களைக் கொண்ட 1,744 பாடசாலைகளும், 51 முதல் 100 ஆசிரியர்களைக் கொண்ட 721 பாடசாலைகளும், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 275 பாடசாலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
எஸ். ஆர். இரவீந்திரன்
