பன்விலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் 15 ஆம் திகதி காலை முதல் பஸ் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க இலங்கை போக்குவரத்து சபை பாததும்பர டிப்போ அதிகாரி நடவடிக கைகளை எடுத்து வருவதாக பன்விலை பிரதேச செயலாளர் நிலூஷா மனோரட்ன தெரிவித்தார்.
பேரிடர் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த போககுவரத்து சேவைக ளை.மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காலை 6.00 மணி 7.00 மணி ஆகிய நேரங்களில் 3 பஸ் போக்குவரத்து சேவைகளை வத்தேகம நகரிலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரத்தனை பிரதேசம் ஊடாக குகுல் ஒய சந்தி வழியாக கோமரை பிரதேசம் நோக்கிய பஸ் சேவை ஒன்றும், குகுல் ஒய சந்தி ஊடாக மடுல்கலை Y சந்தி வழியாக கபரகலை பிரதேசம் நோக்கி ஒரு பஸ் சேவையும் இடம்பெறவுள்ளது.
இதனிடையே பேரனர்த்த காலத்தில் மடுல் கலை பிரதேசங்களிலேயே நிறுத்தப்பட்டிருந்த இரட்டைக்கதவு பஸ் வண்டிகளை ஆத்தளை பிரதேசம் வரை சேவையிலீடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாதை பெரிதும் சேதமடைந்துள்ள கெவும் போக் பிரதேசம் வரை பன்விலையிலிருந்து பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து ஆத்தளை பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்து கபரகலை பிரதேசத்திற்கு செல்ல முடியுமெனவும் தெரிவிக்கப்படுகிறது
பன்விலை நிருபர் ம.நவநீதன்
