மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று13 ம் திகதி காலை 9. 30 சபை முதல்வர் கே.இராஜ்குமார் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கலந்து கொள்ள வில்லை அவர்கள் அனைவரும் தலைநகரில் உள்ள செயல் அமர்விற்குச் சென்று விட்டார்கள்.
மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 இற்கான வரவு செலவு முன் மொழிவு இடம் பெற வில்லை சபை நிகழ்வுகள் மட்டுமே இடம் பெற்றன.
சபை அமர்வில் பல தீர்மானங்கள் வாத விவாதங்களின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டன.
குறிப்பாக சாமிமலை கவரவலை சந்தியில் உள்ள கிராமம் அடிக்கடி மழை காலங்களில் அங்கு உள்ள குடியிருப்புகளுக்கு வெள்ள நீர் உட் புகுவதால் அப் பகுதியில் உள்ள மக்கள் பாரிய அளவில் இன்னல் உருவதால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அந்த பகுதியை ஊடறுத்து செல்லும் வாய்க்கால்களை அகலப் படுத்தியும் ஆழப்ப்படுத்தியும் வெள்ள நீர் வழிந்தோட வழி செய்ய நடவடிக்கை எடுக்க சபை அனுமதி வழங்கியது.
அதேபோல் சாமிமலை நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் உள்ள நிழல் குடை கட்டிடம் பாரிய அளவில் கழிவு நீர் உட் புகுவதால் துர் நாற்றம் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.
அந்த கட்டிடத்தை வேறு பாவனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.
சபையின் வருமானத்தை அதிகரிக்க மொக்கா டீ சைட் பகுதியில் தோட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர் மஸ்கெலியா பிரதேச சபையால் அடைக்கபட்டு விற்பனைக்கு விடல் சம்பந்தமான முன் மொழிவை சபை முதல்வர் கொண்டு வந்தார்.
உப தவிசாளர் அதற்கு பதில் அளித்த போது பெருந்தோட்ட நிறுவனத்துடன் முறையான ஒப்பந்தங்கள் சட்டப்படி கைச்சாத்திட வேண்டும் எனக்கோரிக்கை முன் வைத்துப்பேசினார். இத் திட்டம் சரிவரும் பட்சத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும் என்று கூறினார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
