ஷொப்பிங் பைகளுக்குக் கட்டணம் அறிவிடும் செயற்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடு என்றும் நிலையான நடவடிக்கையின் ஆரம்பக் கட்டம் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் பொலித்தீனுக்கு வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அவ்வாறு வரி விதித்தால், வர்த்தகர்கள் பொலித்தீனுக்குக் கட்;டாயம் பணம் அறவிட வேண்டி வரும் என்றும் சுற்றாடல் அமைச்சர் அன்ரன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஷொப்பிங் பைகளுக்குக் கட்டணம் அறவிடும் நடைமுறைக்குச் சில வர்த்தகர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருககின்றபோதிலும் இந்தத் தற்காலிக நடவடிக்கை தொடரும் என்று அமைச்சர் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
