தென் மாகாண ஆளுநர் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீர் நோய் நிலைமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அன்னார் காலமானார்.
62 வயதுடைய இவர் அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல உயர் அரச பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
