கண்டி மடுல்கலை கெலாபொக்க (நடுக்கணக்கு) மத்திய பிரிவு தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 29 குடும்பத்தை சேர்ந்த 60 பேர் நேற்று இரவு (26.11.2025) டியனில்ல மமா/க/வத்/விபுலானந்த தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுவுள்ளனர்.
இதனிடையே கண்டி பன்விலை லெபனான் தோட்டத்திலுள்ள 32 குடும்பத்தை சேர்ந்த 82 பேர் லெபனான் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுவுள்ளனர்.
மேலும் பல தோட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் தொடர்ந்து கடும் மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் மண் சரிவு அபாயம் காரணமா பெரும் அச்சம் கொண்டு செய்வதறியாது திக்குமுக்காடுகின்றனர்.
மண் சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாலும் மண் மேடுகள் சரிந்து விழுவதாலும் கற்கள் பாறைகள் வீதிகளில் மிக உயரமான இடங்களிலிருந்து விழுவதாலும் பன்விலை நகரிலிருந்து பம்பரல்ல ,கோமரை,பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
மடுல்கலை மூலகடை பிரதேசத்தலிருந்து நெல்லிமலை தோட்டப்பகுதிக்கு செல்லும் வீதியில் மண் மேடு சரந்து விழ்ந்துள்ளதார் மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பன்விலை ம. நவநீதன்

