அமெரிக்கா செல்லாமல் கனடாவில் தரையிறக்கம் சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் இரண்டு போர் விமானங்கள் உதவியுடன், Air India விமானம் மக்கள் தொகை குறைந்த பகுதிக்கு வழிகாட்டப்பட்டது. பின்னர் Changi விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு, வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அதே விமான நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு விமானம் அமெரிக்காவின் சிகாகோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் தரையிறங்கியது.
Category: உலகம்
சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் முடக்கம்
சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் தலைநகர் பாதுகாப்புக்காக முடக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீனப் பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பம்சமாகும். இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு
இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்கு
இலக்கியத்திற்கான நோபல்பரிசு தென் கொரியாவுக்குக் கிடைத்துள்ளது. 2024 இலக்கியத்திற்கான நோபல் பரிசை தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் வென்றுள்ளார். கவிதை உரைநடை இலக்கியத்திற்கான பரிசாக ஹான் காங்கிற்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய தி வெஜிடேரியன் என்ற கவதை நாவலுக்காக இந்தப் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கை குறித்த கவிதை உரை நடை நாவலை 2007ஆம் ஆண்டு ஹான் காங் வெளியிட்டார். இந்த நூலுக்கு 2016இல் புக்கர் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், ஆங்கிலம், பிரெஞ் உள்ளிட்ட 25 மொழிகளில் தி வெஜிடேரியன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான…
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நுண் மரபணு ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ், கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுண் மரபணு RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை வேரோடு பிடுங்குவோம் – ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் ஆன்மிகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி சில பகீர் கருத்துகளைத் தெரிவித்தார். இஸ்ரேல் வேரோடு பிடுங்கப்படும் என்ற அவர், அமெரிக்கா இஸ்ரேலை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவதாக எச்சரித்தார். மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடியாகப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவுக்கு நினைவு கூட்டம் ஈரான் நாட்டில் நடைபெற்றது. இதில் ஈரான் நாட்டின் மீயுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி நேரடியாகக் கலந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் கமேனி பொது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். இதில் அவர் நேரடியாக இஸ்ரேல்…