இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர். ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்: மாகோவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான தண்டவாளப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் (28) கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது. ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய, இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்தியாவின் மும்பையிலிருந்து கொழும்பு வந்த விஸ்டாரா விமானத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இதற்கு முன்பும் விடுக்கப்பட்டு அந்த விமானமும் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இன்றும் தொலைபேசியில் மிரிட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்துத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Airbus A-320 ரக இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 விமானப்…

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் அறுகம்பே பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என்று தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை செய்வதாகக் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக டெய்லிமரர் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவலைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுவட்டாரங்கள் குறித்து எந்நேரமும் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து உடனே வெளியேறிவிடுமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. அவசரத் தேவைகளின்போது 119 என்ற பொலிஸ் அவசர இலகத்திற்கு அறிவிக்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகம், உள்ளுர் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்பாடல் கருவிகளை உரிய முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது: புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது. இனிமேல் எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு வழியில்லை எனக் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது என்பதோடு புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுகள் விரைவில் விநியோகிக்கப்படும் எனவும், மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி!

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி

இந்தியாவில் விரைவில் பறக்கும் டாக்ஸி அறிமுகமாவுள்ளது. பெங்களூரு விமான நிலையத்திலிருந்து இந்த மின்சார பறக்கும் டாக்ஸி அறுமுகமாகவுள்ளதாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்து. பெங்களுரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு வாகனத்தில் தரைமார்க்கமாக பயணித்தால் 3 மணி நேரமாகுமாம். இனி இந்த சிரமம் இருக்காது, 19 நிமிடத்தில் சென்றுவிடலாம் என்கிறது பெருநகர நிர்வாகம். 1,700 ரூபாய் கட்டணம்… 19 நிமிட பயணம்… சர்வதேச விமான நிலையம் முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரை மின்சார பறக்கும் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரப்போகிறது பெருநகர நிர்வாகம். இது முதற்கட்டம் என்றும், இதனால் மூன்று மணி நேரப் பயணம் வெறும் 19 நிமிடங்களாக குறையும் எனவும் கூறுகின்றனர். இந்தச் சேவையை வழங்க, தனியார் நிறுவனம் தடையில்லாச் சான்று அனுமதிக்காக விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த திட்டம் மூன்று ஆண்டுகளில்…

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும்…

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

அமெரிக்கா செல்லாமல் கனடாவில் தரையிறக்கம் சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் இரண்டு போர் விமானங்கள் உதவியுடன், Air India விமானம் மக்கள் தொகை குறைந்த பகுதிக்கு வழிகாட்டப்பட்டது. பின்னர் Changi விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு, வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அதே விமான நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு விமானம் அமெரிக்காவின் சிகாகோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் தரையிறங்கியது.