காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு என்பதைப்போல ஈரானும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றன. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதனால், ஈரான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்துமாறு தமது படைகளுக்குத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எனினும், இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேல்தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாகவும் அதன்படி பதில் தாக்குதலை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Category: Featured
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு
ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் படையினரை பாராட்டியுள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளுக்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள்…
கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை
கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல் – வடகொரியா
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது. ‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க…
சண்டை முற்றினால் இலங்கையர்களை மீட்போம்
இஸ்ரேல் – ஈரான் சண்டை முற்றினால் இலங்கையர்களை மீட்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் கோரிக்கையை இதுவரை முன்வைக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர், வர்த்தக நோக்கத்திற்காகச் சென்ற இருவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலில் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், இலங்கையர்கள் இருவர் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. எனினும், அவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். இஸ்ரேல் – போர் நிலைமை பற்றி அமைச்சர் ஹேரத் பாராளுமன்றத்தில் விளக்கமளித்தார். இஸ்ரேலில் இலங்கையர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். ஈரானில் 35பேர் உள்ளனர். போர் தீவிரமடைந்தால், அண்டை நாட்டு விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்து வருவதாக அமைச்சர் கூறினார். இதுபற்றிச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சு நடத்தி இருப்பதாகவும் அமைச்சர் சொன்னார்.
ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு
ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு விமானம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) அதிகாலை டெல்லி வந்தடைந்தது. மாணவர்களைக் கண்டதும் அவர்களின் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சுடனும் கண்ணீருடனும் வரவேற்றனர். மீட்கப்பட்டவர்களில் 90 மாணவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் உள்ள மற்ற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல், ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய…
ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை
புதிதாகப் பொறுப்பேற்ற மூத்த ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஜூன் 13ஆம் தேதி ஈரான்மீது குண்டு வீசத் தொடங்கிய இஸ்ரேல், குறைந்தது 11 மூத்த ராணுவ அதிகாரிகளைக் கொன்றுள்ளது. அந்த வரிசையில் மேஜர்-ஜெனரல் அலி ஷட்மானியை தான் கொன்றுவிட்டதாக செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் கூறியது. ஈரானில் ஆக மூத்த ராணுவத் தளபதி என அவரை இஸ்ரேல் வர்ணித்தது. முதல் நாள் போரில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு தினங்களுக்கு முன்புதான் ஷட்மானி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். மேஜர்-ஜெனரல் ஷட்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக கருத்து எதுவும் வெளிவரவில்லை. இது உறுதிப்படுத்தப்பட்டால், ஈரானின் நலிவுற்றுவரும் ராணுவத் தலைமைத்துவத்துக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். திரு ஷட்மானியின் கொலை, ஈரானின் உளவுத்துறைக்குள் ஊடுருவ இஸ்ரேலின் நீண்டகால முயற்சியை…
பொதுமக்களின் கருத்தறிதல் நாளை ஆரம்பம்
பொதுமக்களின் கருத்தறிதல் நாளை ஆரம்பம்: இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை (23) முதல் ஆரம்பமாகிறது. ஜூன் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் பொதுமக்களின் கருத்தறிதல் நாளை ஆரம்பம் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார். இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், முன்மொழியப்பட்ட புதிய மின்சார கட்டண திருத்தத்திற்கு அமைவாக கட்டண அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடைமுறையில் இருந்த மின்சார கட்டணத்தை விட இது குறைவாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டணங்களை திருத்துவது தொடர்பான…
வடக்கில் மே 29இல் போராட்டம்
வடக்கில் மே 29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வடக்கில் மே 29இல் போராட்டம் ஆரம்பமாகும். அந்தப் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும். வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த…