நடிகர் டில்லி கணேஷ் காலமானார்

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்: வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.…

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி!

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி! அது என்ன ஆங்கரை?அச்சிற்றூரைப் பற்றி யோசித்தேன்பளிச்சிட்டது எனக்குள் ஒரு பதில் ஆணலை பெண்ணலை போன்றுஆண்+கரை = ஆங்கரை என்றும்அதற்குத் துணையாக அமைந்த பெண் பெயர்தான் “பைரவி.” அர்த்தநாரியாகிய அந்தச் சிவனும் பார்வதியும் ஒன்றாகி அமைந்ததால் “ஆங்கரை பைரவி” எனும் அதியற்புத அதிர்வலைகளைக் கொண்ட திருநாமம் இக் கதாநாயகனுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி பற்றி இப்போது புரிந்திருக்கும். பிட்டுக்கு மண் சுமந்தவர் இறைவனார் சிவன் தமிழ்கூறு நல்லுலகில் தன் பெயர் நன்முறையில் நிலைக்கப் பாடுபட்டவர் (நாளும் பாடுபடுபவர்) நம்ம “ஆங்கரை பைரவி” அவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரெழுதி வாசித்துக் கடக்க முடியாமல் என்னை மூர்ச்சையாகிக் கீழே விழச் செய்தது இவரின் “பின்னிருக்கையில் ஒரு போதிமரம்.” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல். இப்பொழுதுக் “காஞ்சுருட்டான்”…

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா?

அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? என்ற கேள்விக்கு எத்தனைபேருக்குப் பதில் தெரியும்? ஜனாதிபதியுடன் நடந்த கூட்டத்தில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக அவதானம் என்று எழுதுகிறார்கள். சிங்களத்தில் அவதானம் என்பது கவனத்தையும் குறிக்கும் ஆபத்தையும் குறிக்கும். தமிழில் அவதானம் என்பது ஒரே தடவையில் அல்லது வேளையில் பல விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்துவதைக் குறிக்கும் ஒரு வட சொல்லாகும். பீடை நாசினிகள் ஆபத்தானவை அவதானமாகக் கையாளவும் என்று சொல்வது எச்சரிக்கை செய்வதாகப் பொருள்படும். இதிலிருந்து கவனம் வேறு அவதானம் வேறு என்பது புரியும். கவனம், அவதானம் என்பதைப் பற்றி …விஜயா என்கின்ற வரைப்பதிவாளர் தரும் விளக்கத்தைப் படியுங்கள் யாம் பெற்ற இன்பம் – 20 அவதானம், கவனம் இரண்டும் ஒன்றா? கவனத்திற்கும் அவதானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? என்று ஆராய்ந்தால்,…