தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு

தேங்காய் விலை

தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் தற்போது தேங்காய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்களுடன் தாமும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 150 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

காத்தான்குடி பாத்திமா பிரதமரிடம் மகஜர்

காத்தான்குடி மாணவி

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார். சிறுவரகளும் இளைஞர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார். தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த மாணவி மரணம்!

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொழும்பு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபையின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தலைமையில் கொழும்புவில் ஈபிடிபி போட்டியிடுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கொழும்புவில் ஈபிடிபி சார்பில் போட்டியிடுகின்றனர். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர், வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு ஈபிடிபியைப்…