பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. தமது 88 ஆவது வயதில் பாப்பரசர் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தார்.

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை

இஸ்ரேல் பயணிகளுக்கு மாலைதீவில் தடை: மாலைத்தீவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிகின்றன. பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை கண்டித்து இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் மாலைத்தீவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பங்களாதேஷ் , பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மாலைத்தீவும் தங்கள் நாடுகளுக்குள் இஸ்ரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் நுழைய தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு: சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு!

அமெரிக்க பொருள்களுக்குக் கனடா வரிவிதிப்பு

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு: கனடாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக இருந்தால், அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். “நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்” என்று…

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!, இஸ்ரேல் படையினர் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன. சுகாதார திணைக்கள ஊழியர்கள் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்

பங்களாதேஷ் ஜனாதிபதி விலகக்கோரி போராட்டம்: பங்களாதேஷில் மீண்டும் மாணவர் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி பதவி விலகக் கோரி இன்று நடந்த இந்தப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் முயற்சித்தனர். எனினும் அந்த முயற்சியை பாதுகாப்புப் படையினர் முறியடித்துள்ளனர். பங்களாதேஷ் அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது. போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தைக் கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர். மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது. அதன் பின்னர், நாட்டில்…

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்

ஹமாஸ் தலைவர் சின்வார்

தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது ஹமாஸ்: தமது தலைவர் கொல்லப்பட்டார் என்தை இன்று ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தமது தலைவர் போராடியே இறந்தார் என்று தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம், இனிப் பயணக் கைதிகள் விடுதலை என்ற பேச்சக்கு இடமில்லை என்றும் அது போர் நிறுத்தத்திற்குப் பின்னர் ஆராய வேண்டிய விடயம் என்றும் தெரிவித்துள்ளது. இதெவேளை, ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா இன்று (18) பதிலளித்துள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்றும் இஸ்ரேலுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திய ஹமாஸ், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத் தலைவர் யஹியா சின்வார் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேலின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட முக்கிய நபராக…

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை

ஹமாஸ் தலைவர் சின்வார்

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை என்று அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாந்திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனக் கருதப்படும் ஹமாஸ் தலைவர் சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து பலஸ்தீன நாட்டை சேர்ந்தச் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் மூன்று முக்கியமான தலைகள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை…