கண்டி தமிழ் வர்த்தக சங்கம் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கஷ்ட்டப் பிரதேசமான பன்விலை பகுதி மாணவர்களுக்கு இலவச கற்றல் உபகரணங்களை உபகரணங்களை வழங்கி வைத்தது.
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 750 தோட்டப்புற பாடசாலை மாணவர்களுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பன்விலை பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினரும் சமூக சேவகருமான செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார்.பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின் கீழுள்ள டீமலை நெல்லிமலை மடுல்கலை ரெலுகஸ் கெலாபொக்க ஆத்தளை பன்விலை மடுல்கலை போன்ற
மலையக தோட்டப்புற மாணவர்களை தெரிவு செய்து அவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இவ்வாறு கற்றல் உபகரணங்களை தெரிவு செய்து வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கண்டி தமிழ் வர்த்தகர் சங்கத் தலைவர் P.குமாரதாஸ்
செயலாளர் R.இராமராஜ் ஒழுங்கமைப்பாளர்
செல்லமுத்துப்பிள்ளை சுரேஸ்குமார். உறுப்பினர்களான கே.சுந்தரமூர்த்தி
கே.திருச்செல்வம்
எஸ்.தியாகராஜா
எஸ்.ஜெயகாந்தன்
எஸ்.வேல்ராஜா மமா/க/வத்/சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய அதிபர் ம.நவநீதன். ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.கடந்த 16 வருடங்களாக இவ்வாறு மலையக சமூக மேம்பாட்டிற்கு பல்வேறு சமூக நலத் திட்டங்களை இவ் அமைப்பு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
பன்விலை நிருபர் ம.நவநீதன்






