Image By AI
தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக ஆண் ஒருவர் தீ வைத்துக்கு கொண்டு தற்கொலை முயற்சித்தார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த வேலுசாமி புஷ்பராஜ் என்ற குடும்பஸ்தர் இன்று பகல் 2.45 மணி அளவில் தலவாக்கலை பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்பாக தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் இறங்கினார்.
தனது 9 வயது மகனுக்கு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரதம வைத்திய அதிகாரி போதைப்பொருள் வழங்கி வருவதாகவும், சில அரச அதிகாரிகளும் வைத்தியரும் இணைந்து தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இந்த நபர் குற்றம் சுமத்தினார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்
அதனைத் தொடர்ந்து தனது முறைப்பாட்டை இன்றைய தினம் தலவாக்கலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு வந்த போதிலும் அவர்களும் அதனை ஏற்காததை தொடர்ந்து தனது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னைத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
பிரதேச மக்கள் துரித கதியில் செயற்பட்டு அவரை காப்பாற்றி அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
கௌசல்யா
செ. தி. பெருமாள்
