Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • மண்ணின் மைந்தர்கள்
  • மலையகத் தமிழர்களை வடகிழக்கில் குடியமர்த்த எந்தத் தடையும் இல்லை

மலையகத் தமிழர்களை வடகிழக்கில் குடியமர்த்த எந்தத் தடையும் இல்லை

Malaikuruvi December 13, 2025
மலையகத் தமிழர்களை வடகிழக்கில் குடியமர்த்த எந்தத் தடையும் இல்லை

மலையகத் தமிழர்களை வடகிழக்கில் குடியமர்த்த எந்த தடையும் இல்லை! என்று முன்னாள் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மலையக தமிழ் உறவுகளை வடகிழக்கில் குடியமர்த்துவதே அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் நாட்டில் நிலவிய டிக்வா புயல் தாக்கத்தினால் கடந்த 2025 நவம்பரில் மலையகத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களினாலும் வெள்ளம் மழை மண்சரிவாலும் மலையகத்தில் மக்கள் நிரந்தரமாக வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது

அவர்கள் வடகிழக்கில் பொருத்தமான இடத்தில் குடியமர்த்தும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் வருடத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கடந்த புயல் வெள்ளம் மண்சரிவால் மலையக மக்களுக்கான நிரந்தர வதிவிடம் தொடர்பாக கூறுகையில் மலையக மக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியமர்த்துவதற்கு தயாராக இருப்பதாக முதன்முதலில் 2014 இ ல் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நாம் தெரிவித்தோம் என்பதை ஞாபகமூட்டுகிறேன்.

கடந்த 2014 அக்டோபர் 29 இல் பதுளை மாவட்டத்தில் மண்சரிவால் 10 பேர் உயிரிழந்தனர் அந்த அனர்த்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மலையகபாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பின்போது அப்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பொ.செல்வராசா பா.அரியநேத்திரன் (நான்) சீ.யோகேஷ்வரன் ஆகிய மூவரும் மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினோம்

மலையக மக்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருத்தமான இடத்தில் நீங்கள் விரும்பினால் குடுயேற்றுவதற்கு நாம் பூரண ஆதரவை தருவோம் என கூறினோம் ஆனால் அப்போது அதனை எவரும் பெரிதாக கவனத்தில் எடுக்கவில்லை.

மலையகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் அதனை ஏற்றாலும் அதற்கான தொடர் நடவடிக்கையினை எடுக்கவில்லை அப்போதைய மகிந்தராஷபக்‌ஷ அரசும் அதனை கணக்கில் எடுக்கவில்லை.

அவர்களின் வேதனைகளை பொருப்படுத்தாது செயல்பட்டனர்.ஆனால் இப்போது கடந்த 2025 நவம்பர்,26, தொடக்கம் நவம்பர் 30, வரை ஏற்பட்ட மெருவெள்ளமல மழை சூறாவளியால் மலையகத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 14பிரதேச செயலகத்தில் உள்ள இடங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வீடு அமைக்க 50 இலட்சமும் காணி கொள்வனவுக்கு 50 இலட்சமும் என அறிவித்துள்ளனர். இதனை மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டம் அமைக்க சமதரைகள் மலையகத்தில் மிகவும் குறைவாக உள்ளதன.

அதைவிட அங்கு செல்லும் பாதைகளிலும் மண்சரிவு அபாயம் உள்ளது இதனை கருத்தில் எடுத்து தாமதிக்காமல் உடனடியாக அவர்களை வடகிழக்கில் பொருத்தமான இடங்களில் குடியமர்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே மலையக மக்கள் பல இடங்களில் குடியேறி வாழ்கின்றனர். அவர்களை மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியமர்த்த மாவட்ட மக்கள் எவருமே தடையில்லை

அதுபோல் வடமாகாணத்தில் ஏற்கனவே கிளிநொச்சி முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஏனைய இடங்களிலும் மலைய மக்கள் வாழ்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மணோ கணேசன் மலையக மக்கள் வடகிழக்கில் குடியேறுவதற்கு மலையக மக்கள் விரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலையக மக்களுடைய உயிரை காப்பாற்றுவதே இன்று சகல அரசியல் தலைவர்களுக்கும் முக்கியமான செயல் என்பதை உணர்ந்து மண்சரிவு இனம் காணப்பட்ட இடங்களில் உள்ள மலையக மக்கள் உயிர்வாழ பாதுகாப்பான இடம் வடகிழக்கு மட்டுமே இருக்கின்றது..

நடந்தவை நடந்து முடிந்ததாக இருக்க இனிவரும் காலங்களிளாவது மலையக மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய நடவெடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனத்தெரிவித்தார்.

சா.நடனசபேசன்

Post navigation

Previous: இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப் பத்திர ஒப்பந்தம் புதுப்பிப்பு
Next: வத்தேகம- கபரகலை வீதியைப் புனரமைக்க இந்தியப் பாலம் பொருத்தப்படும்

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026
துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல்

துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |