மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக விமல சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து உள்ளது அதன் காரணமாக மேலதிக நீரை வான் கதவுகள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கென்யோன் நீர்தேக்கத்தின் வான் கதவு திறந்து விடப்பட்டு உள்ளது.
நீர் வெளியேற்றம் காரணமாக களனி கங்கை கரையோர பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய பொறுப்பதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்
