Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • Lifestyle
  • விபத்தில் சிக்கியவருக்கு வீதியில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

விபத்தில் சிக்கியவருக்கு வீதியில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

Malaikuruvi December 25, 2025 1 minute read
விபத்தில் சிக்கியவருக்கு வீதியில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

செய்தியை செவிமடுக்க கீழே அழுத்துங;கள்

விபத்தில் சிக்கிய இளையருக்கு போக்குவரத்து நிறைந்த சாலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள உதயம்பேரூர் என்கிற இடத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23), 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், 40 வயதான வினு என்பவர் படுகாயமடைந்தார். விபத்தின்போது அவர் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்த நிலையில், சாலையில் சென்றவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அப்போது அவ்வழியே காரில் சென்று கொண்டிருந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான மனூப்பு சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உடனடியாக தனது காரை நிறுத்தி உயிருக்குப் போராடிய வினுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.

இவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக கொச்சி கூட்டுறவு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவத் தம்பதியினரான தாமஸ் பீட்டர், திதியா ஆகியோரும் அவ்வழியே வந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவர்களும் உதவிக்கரம் நீட்ட, உயிரைக் காப்பாற்றும் போராட்டம் வேகம் பெற்றது.

விபத்தின்போது வினுவின் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் நுரையீரலுக்குள் மண் புகுந்ததால் அவர் மூச்சுத்திணறுவதும் தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் மூன்று மருத்துவர்களும் துணிந்து முடிவெடுத்தனர்.

இதையடுத்து, விபத்து நடந்த சாலையின் நடுவே கைப்பேசி வெளிச்சத்தில் பிளேடு உள்ளிட்ட சிறிய உபகரணங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை தொடங்கியது.

வினுவின் கழுத்தில் சிறிதாகத் துளையிட்டு ஒரு ஸ்டிராவைப் பயன்படுத்தி அவர் மூச்சுவிட வசதி ஏற்படுத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பின்னர் அவசர வாகனம் மூலம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.

வினுவுக்கு கைப்பேசி வெளிச்சத்தில் சாலையில் வைத்து சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மூன்று மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

நன்றி – தமிழ் முரசு

Post navigation

Previous: துரிதமாக சீரமைக்கப்படும் கம்பளை நகரம்
Next: சுனாப் பேரழிவின் 21 ஆவது ஆண்டு நிறைவு

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
https://www.mathemurasu.lk/554y

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

Malaikuruvi March 1, 2026

Trending News

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 1

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 2

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 3

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026
சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு WhatsApp Image 2026-03-01 at 19.36.18 4

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

March 1, 2026
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் https://www.mathemurasu.lk/554y 5

ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
modi

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

Malaikuruvi March 1, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு
  • ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |