வாழைச்சேனை – பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் திருவாசக முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை (28) காலை நடைபெறுகிறது.
திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது முதுமொழி. இதற்கமைய வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில் 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை திருவெம்பாவை விரதத்தினை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்வானது காலை 7மணியளவில் எமது ஆலயத்தில் இடம்பெறுகிறது.
திருவாசகம் முற்றோத விரும்பும்,அனைத்து பக்த அடியவர்களையும்,பாடசாலை மாணவர்களையும்,அனைத்து அறநெறிப் பாடசாலை மாணவர்களையும்,அனைத்து குருமார்களையும், கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினர்.
