அடிக்கடி வெள்ள பெருக்கு ஏற்படும் சாமிமலை பகுதியில் உள்ள கவரவலை கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் பகுதியில் வெள்ளப்பெருக்கைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகிறது.
கன மழை பெய்யும் போது எல்லாம் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சாமிமலை கவரவலை சந்தியில் உள்ள கிராமம் மற்றும் கிரீன்லைட் பாம் வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டு வருகிறது.
இதனைத் தவிர்க்க நோர்வூட் பிரதேச செயலாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக சாமிமலை அப் பகுதியில் அள்ளப்படும் மணல் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பிரயோசனம் படுத்த முடியும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி கவரவலை கிராமம் ஊடறுத்து செல்லும் வாய்க்கால்களை அகலப் படுத்துவடன் ஆழப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் இப் பகுதியில் மக்கள்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்
