மஸ்கெலியாவில் போக்குவரத்து பொலிசார் இருந்து பயன் இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்..
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிசார் இருந்தும் கடந்த பல மாதங்களாக சேவையில் ஈடுபடுவது இல்லை என்று நகர் வாழ் மக்களும் வாகன சாரதிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நகரில் உள்ள சகல வீதிகளிலும் இரு புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பாடசாலை மாணவர்கள், பயணிகள், பாதசாரிகள் பயணிக்க முடியாத நிலை எற்படுகிறது.
அடிக்கடி வீதியில் இடையூறு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனைத் தவிர்க்க மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து பொலிசார் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


