நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக காலை வேளையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக நுவரெலியா – ஹட்டன், ஹட்டன் – கண்டி, ஹட்டன்- கொழுப்பு, ஹட்டன் -சாமி மலை, ஹட்டன்- பொகவந்தலாவ, ஹட்டன் -மஸ்கெலியா, ஹட்டன் -நல்லதண்ணி, ஹட்டன்- நோட்டின், ஹட்டன்- டயகம, ஹட்டன்- தலவாக்கலை மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு ஹட்டன் வலய காவல் துறை தலைமை அதிகாரி பிரதீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மத்திய மலை நாட்டிற்கு வருகை தந்த வாகனங்கள் மீண்டும் கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளுக்குச் செல்லும் போது மிக மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது . பகல் வேளையில் அதிக உஷ்ணம் நிலவிவரும் வேளையில் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
மஸ்கெலியா விசேட நிருபர்


