புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் கல்வி பயின்ற மாணவர்களின் அனுசரணையில் பாடசாலைக்குரிய பெயர் பலகை நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் ஆர். பாலசந்திரன் தலைமையில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற இதற்குரிய நிகழ்வில் கம்பளை கல்வி வலயத்தின் பிரதி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் ரம்யா ஜேசுபாதம் விசேட அதிதியாக கலந்துகொண்டார்.
இந்து தேசிய கல்லூரியின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் கார்த்திக் உட்பட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் பி.பிரபாகரன் மற்றும் 2002 அணி மாணவர்கள் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
கெளசல்யா


