பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஜீவன் தொண்டமான் இடையே சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு பிரித்தானிய இல்லத்தில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) அவர்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (21) சந்தித்துக் கலந்துரையாடினார்.
துணை உயர்ஸ்தானிகர் தெரேசா ஓ’மஹோனி (Theresa O’Mahony) அவர்களுடன் இணைந்து, மலையக சமூகத்தின் முன்னுரிமைகள், தித்துவா புயல் தொடர்பான தாக்கங்கள்,நீண்டகாலமாக நிலவி வரும் ஏனைய முக்கியப் பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அவர்களின் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்த ஜீவன் தொண்டமான், இலங்கை,ஐக்கிய இராச்சியம் இடையிலான நீண்டகால நட்புறவு, கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உரையாடலைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஊடகப்பிரிவு
ஜீவன் தொண்டமான் பா.உ
