கண்டி பன்விலை பிரதேசத்தில் மின்சாரம் முழுதாக துண்டிக்கப்பட்ட நிலையில் குடிநீரில்லாமல் மக்கள் பெரும் துன்பப்படுவதோடு பன்விலையிலிருந்து கபரகலை கோமரை நக்கல்ஸ் பெத்தேகம மடுல்கலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது
பன்விலை ஆத்தளை தோட்டத்திலுள்ள குடியிருப்புகளிலும் நிலப்பரப்புகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆத்தளை தமிழ் வித்தியாலயம் மடுல்கலை பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயம் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு அவசரமாக இடம்பெயர்ந்த வண்ணமுள்ளனர்.
பன்விலை மற்றும் கபரகலை பிரதேசத்தை இணைக்கும் பிரதான வீதியில் கெவும் போக் பாலம் உடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது
இதைப் பார்ப்பதற்கு மக்கள் செல்வதைத் தடுக்க வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளதோடு புதினம் பார்க்க செல்வதனால் பல ஆபத்தான சம்பவங்கள் நாட்டின் பல பாகங்களிலும்ஏற்பட்டுள்ளதால் அதனை தவிர்க்குமாறும் அவதானமாக இருக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும் பொலிஸாரும் பொது மக்களை கேட்கின்றனர்.
பன்விலை நிருபர் ம.நவநீதன்


