பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுகின்ற இலக்கை நோக்கிய பயணத்தில் செல்மின் அமைப்பு புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள சுலக்ஷனா கல்வி நிறுவன மாணவர்கள், புங்குடுதீவு நாகதம்பிரான் ஆலயம் ஆகியோருக்கு பயன்தரு மரங்கள் கையளிக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் செல்மின் நண்பர்கள் இளங்கோ மற்றும் கிருஷ்ணநாதன் ஆகியோர் கலந்து கொண்ட துடன் மாணவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
சுலக்ஷனா கல்வி நிறுவனம், நாகதம்பிரான் ஆலய சூழலில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




