இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியுடன், இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) அவர்களின் தலைமையில், நுவரெலியா தோட்டங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 408 பயனாளிகளுக்கு கற்றல் உபகரணங்களுளும் சுகாதாரப் பொருள்களும் வழங்கப்பட்டன..
நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை இராகல மகா ஊவா தோட்டப் பகுதிகளில் வசிக்கும் 408 குடும்பங்களுக்கு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் கண்டு, கற்றல் உபகரணங்களும் சுகாதாரப் பொருள்களும் விநியோகம் செய்யப்பட்டன.
இரண்டு நாள்களில் (07 – 08) இந்திய உதவி உயர் ஸ்தானிகர் (கண்டி) திருமதி சரண்யா வி.எஸ் அவர்களின் தலைமையில் இவை வழங்கப்பட்டன.
கந்தப்பளை பகுதியில் 157 பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இராகல மகா ஊவா தோட்டப் பகுதியில் 251 குடும்பங்களுக்கு சுகாதாரப் பொருள்களும் விநியோகிக்கப்பட்டன.
பரஸ்பர மரியாதை, அண்டை நாட்டுக்கு முன்னுரிமை என்ற கொள்கையால் வழிநடத்தப்பட்டு, பொருளாதார, சுகாதாரத் தேவைகளைக் கொண்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை ஆதரிப்பது, சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த விரிவான மனிதாபிமான முயற்சி, நுவரெலியாவில் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு கட்டமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.
நிகழ்ச்சித் தொடரில் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலு யோகராஜ்,, வலப்பனை பிரதேச செயலகத்தின் துணைப் பணிப்பாளர் (திட்டமிடல்) டி. எம். எஸ். திசாநாயக்க, வலப்பனை பிரதேச சபையின் செயலாளர் கே. எம். ஜி. பி. கெகுலந்தர, நுவரெலியா, வலப்பனை பிரதேச சபை அதிகாரிகள் நந்தன டயஸ், பயனாளிகள், குடியிருப்பாளர்கள், பள்ளி க்குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நுவரெலியா ஆர். எப். எம். சுஹெல்





