காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் பாய்ந்ததால் கண்டி மடுல்கலை நெல்லிமலை பிரதேசத்தில் காடுகள் அழிந்து கற்குவியல்களால் நிரப்பப்பட்ட கடற்கரை போன்ற புதிய ஒரு பிரதேசம் தோன்றியுள்ளது.
பாலம் ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.இதனால் இப்பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளம் பாய்ந்தோடிய நெல்லிமலை தோட்ட ஆற்றங்கரை ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது
இவ்வாலயத்தையும் இ்ப்பிரதேசத்தையும் மக்கள் வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர். இவ் ஆலயத்தில் வருடாந்த மணவாள உற்சவம் 22.11.2025 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
பன்விலை நிருபர் ம.நவநீதன்



