எஜமானர்கள் போனாலும் ஊரைவிட்டுப் போகாத வளர்ப்பு நாய்கள்! மாத்தளை கம்மடுவை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிட்வா புயலினால் ஏற்பட்ட மண் சரிவு அனர்த்தத்தில் பெரும் சேதத்திற்குள்ளான மாத்தளை மாவட்ட கம்மடுவ பிரதேத்தில் இறந்தவர்கள் தவிர எஞ்சிய மக்கள் பிரதேசத்தையே கைவிட்டுச் சென்று விட்டனர்.
இதனால் கைவிடப்பட்ட நாய்களுக்காகவும் கட்டாக்காலி நாய்களின் கடும் பசியை போக்கி அவற்றைப் பாதுகாக்கவும் இரக்கமுள்ள இருவர் முன்வந்துள்ளனர்.
பேரவலம் நிகழ்ந்த கம்மடுவ பிரதேச மக்கள் அடுத்த மண்சரிவு ஏற்படலாம் என்ற அச்சத்தில் கிராமத்தை விட்டுச் சென்று விட்டார்கள். கிராமத்தில் ஒருவரும் நாய்களுக்கு உணவளிக்க இல்லை .
கிராமத்தில் இருந்த வயோதிபரான ராஜாவின் ஒத்துழைப்போடு மாத்தளை நலன் விரும்பிகள் சிதம்பரம் ஜெயபிரகாஷ், மகேந்திர ராஜன் மகாலிங்கம் ஆகியோர் உணவு சமைத்து வழங்குகின்றனர்.
தம்மை வளர்த்த காணாமல் போனோரைத் தேடி வளர்ப்பு நாய்கள் அவர்கள் வசித்த வீடுகளைப்பார்த்து குரைத்த வண்ணம் அங்குமிங்கும் செல்வது மற்றுமொரு நெகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது
ம.நவநீதன் பன்விலை

