தித்வா சூறாவளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத் தராதரப்பத்தீர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் இன்று (12) முதல் மீண்டும் தொடங்குகின்றன.
நாடு முழுவதும் 2,086 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறுகிறது. இதற்காக 325 ஒருங்கிணைப்பு நிலையங்களும் 32 பிராந்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இன்று (12) முதல் 20 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறம்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக அடையாளத்தை சரிபார்க்க தேவையான ஆவணங்கள் காணாமல் போனால், அத்தகைய பரீட்சாத்திகளுக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்
