இலங்கையின் மிக உயர 16 அடி பிள்ளையார் சிலை நேற்று 06 புசல்லாவையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கண்டி – நுவரெலியா பிரதான வீதிக்கருகில் புசல்லாவை பகுதியில் தாபிக்கப்பட்ட கற்பக விநாயகர் ஆலயத்திலேயே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அண்மையில் தென்னிந்தியா பிள்ளையார்பட்டியில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட மிகவும் உயரமான 16 அடி பிள்ளையார் சிலை, 6 அடி உயரமான சிவலிங்கம். என்பன புசல்லாவை குபேரப்பட்டி ஸ்ரீ மகா கணபதி கற்பக விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இந்தச் சிலைகள் இலங்கையின் மிகவும் உயரமான சிலைகளாக கருதப்படுகின்றன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



