கோப்புப் படம்
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாள்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன்.
இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்புவை வந்தடைந்தது.
இதனைக் கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
