துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்.
மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்க ஒக்ரோபர் 27 முதல் 28 ஆம் திகதி வரை அவர் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்வார் என கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, மும்பை கண்காட்சி மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில், துறைமுக உள்கட்டமைப்பு, தளபாடங்கள் மற்றும் நிலையான கடல்சார் வளர்ச்சியில் முன்னேற்றங்கள் குறித்து உலகளாவிய கடல்சார் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் போது, துறைமுகங்கள் அபிவிருத்தி, கப்பல் போக்குவரத்து மற்றும் தளபாடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அமைச்சர் கருணாதிலக, இந்திய துறைமுகங்கள், கப்பல்துறை, நீர்வழிகள் அமைச்சர் சிறி சர்பானந்த சோனோவாலுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்
